முகப்பு
இந்தியா

'நான் ஒரு தமிழன்': ராகுல் காந்தி

மக்களவை உரையில் தமிழ்நாட்டை அதிக முறை குறிப்பிட்டது குறித்து கேட்டதற்கு தான் ஒரு தமிழன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:17 AM
பகிர்:


மக்களவை உரையில் தமிழ்நாட்டை அதிக முறை குறிப்பிட்டது குறித்து கேட்டதற்கு தான் ஒரு தமிழன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களையில் இன்று (புதன்கிழமை) பேசினார். அவரது உரையில், தமிழ்நாட்டை அதிகமுறை உச்சரித்தது குறித்து அவரிடம் பின்னர் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, தான் ஒரு தமிழன் என்றார். மேலும் உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உத்தரப் பிரதேசம் குறித்து உரையில் இடம்பெறாதது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. ஆனால், இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதை அவர் தவிர்த்துவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.