முகப்பு
இந்தியா

உ.பி கோயிலில் கடவுள் சிலைகள் சேதம்: பக்தர்கள் எதிர்ப்பு

உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோவியில் விநாயகர், லட்சுமி சிலைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாக காவல்துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோவியில் விநாயகர், லட்சுமி சிலைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாக காவல்துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். 

இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த பக்தர்கள் ஷாஹ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடம்பூர் கிராமத்து அருகிலுள்ள சாலையை மறித்து, குற்றவாளிகளை விரைவில் கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். 

கோயில் கமிட்டி தலைவர் கபில்குமார் கூறுகையில், 

மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சூழலைக் கெடுக்கும் வகையில் இந்த முயற்சியைக் கையாண்டிருக்கலாம். 

மேலும், அங்குள்ள சேதமடைந்த சிலைகளைப் பார்வையிட்டு, காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →