நாளை பிரதமர் மோடி வருகை! திருச்சியில் புதிய கட்டுப்பாடுகள்!!
நாளை பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி: பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, திருச்சியில் நாளை (பிப்.11) டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Advertisement