சிக்கிமில் ரூ. 4,000 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர்!
சிக்கிமில் பிரதமர் நரேந்திர மோடி ரூ. 4,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தது குறித்து...
சிக்கிமில் ரூ. 4,000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களைத் பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாய்க்கிழமை (ஏப்.28) தொடங்கிவைத்தார்.
சிக்கிம் மாநிலம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்த கொண்டாட்டங்களின் நிறைவு விழா காங்டாக்கில் இன்று (ஏப்.28) நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, சிக்கிம் மாநிலம் காங்டாக்கிற்கு நேற்று (ஏப்.27) சென்றார்.
அப்போது அவரை சிக்கிம் மாநில ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்துா், முதல்வா் பிரேம் சிங் தமாங் ஆகியோா் நேரில் வரவேற்றனர். அப்போது மோடி, சிக்கிம் மக்கள் அணியும் பாரம்பரிய தொப்பி, கோட் அணிந்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிறைவு விழா தொடங்கிய நிலையில், சிக்கிம் மாநிலத்தின் உள்கட்டமைப்பு, இணைப்பு வசதி, சுகாதாரம், கல்வி, மின்சாரம், நகர்ப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல், சுற்றுலா மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் ரூ. 4,018 கோடி மதிப்பிலான 30 வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
சிக்கிமில் முழுமையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேம்படுத்துவதே இந்தத் திட்டங்களின் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Prime Minister Narendra Modi launched development projects worth Rs 4,000 crore in Sikkim on Tuesday (April 28).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.