முகப்பு
இந்தியா

நேபாளத்தில் சாலை விபத்து: 8 பேர் பலி, 5 பேர் காயம்

நேபாளத்தில் மத்திய-மேற்கு நேபாளத்தில் பியூதான் மாவட்டத்தில் ஜீப் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பகிர்:

நேபாளத்தில் மத்திய-மேற்கு நேபாளத்தில் பியூதான் மாவட்டத்தில் ஜீப் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். 

பியூதான் மாவட்டத்தில் இன்று காலை திருமண விழாவிற்குச் சென்ற ஜீப் வளைவில் சாய்ந்ததில்  8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

ஒகர்பட்டா என்ற இடத்தில் திருமணம் முடிந்து நவ் பாஹினி கிராம சபையிலிருந்து லிவாங்கின் கௌமுகி கிராம சபைக்கு ஜீப் சென்று கொண்டிருந்ததாக மாவட்ட காவல் அலுவலகத்தின் காவல் ஆய்வாளர் பெனி பிரசாத் கைரே தெரிவித்தார்.

6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், 2 பேர் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். ஜீப் மணமகன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது, இந்த சம்பவம் அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளது. 

விபத்துக்குள்ளான வாகனத்தில் மணமகன் இருந்தாரா என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தவில்லை. 
முதற்கட்ட தகவலின்படி, இறந்தவர்களில் ஐந்து பெண்களும் மூன்று ஆண்களும் அடங்குவதாக காவல்துறையினரால் அடையாளம் காண முடிந்தது.

காவல்துறையினர் விபத்து நடைபெற்ற இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →