நாட்டில் புதிதாக 1.07 லட்சம் பேருக்கு கரோனா
இந்தியாவில் புதிதாக 1,07,474 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிதாக 1,07,474 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. புதிதாக 1.07 லட்சம் பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 865 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 2,13,246 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 5,01,979 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 4,04,61,148 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க | தேர்தலுக்காக கரோனா எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறதா? சுகாதாரத் துறைச் செயலர் விளக்கம்
இன்றைய நிலவரப்படி 12,25,011 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
கடந்த 24 மணி நேரத்தில் 45,10,770 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1,69,46,26,697 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.