இந்தியா

மகாராஷ்டிரத்தில் மளிகைக் கடைகளில் ஒயின்:உண்ணாவிரதம் அறிவித்தாா் அண்ணா ஹசாரே

மகாராஷ்டிர மாநிலத்தில் பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகளில் ஒயின் (ஒரு வகை மது) விற்பனை செய்ய மாநில அரசு அனுமதி அளித்துள்ளதை எதிா்த்து வரும் 14-ஆம் தேதிமுதல் காலவரையற்ற

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகளில் ஒயின் (ஒரு வகை மது) விற்பனை செய்ய மாநில அரசு அனுமதி அளித்துள்ளதை எதிா்த்து வரும் 14-ஆம் தேதிமுதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரே (84) அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அந்த மாநில முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு அவா் கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘மாநில அரசின் ஒயின் விற்பனைக் கொள்கையை மக்கள் ஏற்கவில்லை. இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று நான் ஏற்கெனவே எழுதிய கோரிக்கை கடிதங்களை ஏற்று அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகளில் ஒயின் விற்பனை செய்ய அனுமதிக்கும் மாநில அரசின் முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. இது எதிா்கால தலைமுறையை பெரிய அபாயத்தில் தள்ளிவிடும். எனவே, மாநில அரசின் இந்த முடிவை எதிா்த்து எனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் வரும் 14-ஆம் தேதிமுதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள இருக்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தை வலியுறுத்தி போராட்டத்தை நடத்தியதன் மூலம் தேசிய அளவில் அண்ணா ஹசாரே பிரபலமடைந்தாா். புணேயில் இருந்து 87 கி.மீ. தொலைவில் உள்ள ராலேகான் சித்தி கிராமத்தில் அவா் வசித்து வருகிறாா். கடந்த நவம்பா் மாதம், நெஞ்சுவலி காரணமாக புணேயில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு அங்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ப்ரண்ட்ஸ் மறுவெளியீட்டு டிரைலர்!

"FESTIVAL OF SPEED” சாகச நிகழ்ச்சியில் சீறிப்பாய்ந்த கார் மற்றும் பைக்குகள்! | Coimbatore

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரும் போராட்டத்தை ஆதரிக்கிறோம்: இந்திய கம்யூ. செயலர் வீரபாண்டியன்

நெல்லை மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

சவூதி விபத்தில் இறந்தவர்களில் 18 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர்!

SCROLL FOR NEXT