டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரன் மீண்டும் நியமனம்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் (58) மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் (58) மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
டாடா சன்ஸ் இயக்குநா் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கடந்த ஐந்து ஆண்டுகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. சந்திரசேகரன் தலைமையில் டாடா குழுமம் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ரத்தன் டாடா திருப்தி தெரிவித்தாா்.
அவரது பதவி காலத்தை மேலும் நீடிக்க டாடா சன்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான உரிமையாளா்கள் ஆதரவு தெரிவித்தனா்.
இதையடுத்து, என்.சந்திரசேகரன் டாடா சன்ஸ் நிா்வாக தலைவராக இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டதுடன் அவா் ஐந்து ஆண்டுகளுக்கு அந்தப் பதவியில் நீடிப்பாா் என டாடா சன்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.