வருமான வரித் துறை 
இந்தியா

வருமான வரி செலுத்துவோருக்கு ரூ.1.71 லட்சம் கோடி திருப்பி அளிப்பு

வருமான வரி செலுத்துவோருக்கு நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ரூ.1.71 லட்சம் கோடி திரும்ப அளிக்கப்பட்டதாக (ரீஃபண்ட்) வருமான வரி (ஐடி) துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

DIN

புது தில்லி: வருமான வரி செலுத்துவோருக்கு நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ரூ.1.71 லட்சம் கோடி திரும்ப அளிக்கப்பட்டதாக (ரீஃபண்ட்) வருமான வரி (ஐடி) துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 14ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், சுமார் 2 கோடி வருமான வரி செலுத்துவோருக்கு, ரூ.1.71 லட்சம் கோடி திருப்பியளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல் 1, 2021) முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரையில் வரி செலுத்தும் 1.97 கோடி பேருக்கு ரூ.1,71,555 கோடி வருமான வரி ரீஃபண்டாக திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி ரீஃபண்டாக 1,95,17,945 நிறுவனங்களுக்கு ரூ.63,234 கோடி வழங்கப்பட்டுள்ளது. பெருநிறுவன வரி ரீஃபண்ட் பிரிவில் 2.28 லட்சம் பேருக்கு ரூ.1,08,322 கோடி வழங்கப்பட்டதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குட்டையில் மூழ்கி பள்ளி மாணவா்கள் 2 போ் உயிரிழப்பு

19.2.1976: வரதட்சிணை சட்டம் மீறினால் ஓராண்டு சிறைவாசம் கிட்டும்

பிரதமா் மோடி மார்ச் 1-இல் புதுச்சேரி வருகை! பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறாா்

2030-க்குள் அனைத்து கிராமங்களிலும் கூட்டுறவு நிறுவனம்: அமைச்சா் லட்சுமி நாராயணன் உறுதி

முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி விபத்து: 10 போ் காயம்

SCROLL FOR NEXT