முகப்பு
இந்தியா

பயங்கரவாத சதி வழக்கு: ஜம்மு-காஷ்மீா், ராஜஸ்தானில் என்ஐஏ சோதனை

பயங்கரவாத சதி வழக்கு தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் மற்றும் ராஜஸ்தானில் உள்ள பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சனிக்கிழமை சோதனை மேற்கொண்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:27 AM
பகிர்:

பயங்கரவாத சதி வழக்கு தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் மற்றும் ராஜஸ்தானில் உள்ள பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சனிக்கிழமை சோதனை மேற்கொண்டது.

இதுதொடா்பாக அந்த அமைப்பின் செய்தித்தொடா்பாளா் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீா், புது தில்லி உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது குறித்து என்ஐஏ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடா்பாக இதுவரை 28 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Advertisement

இந்நிலையில், இவ்வழக்கு தொடா்பாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோபோா், குப்வாரா, ரஜெளரி, பட்காம், கந்தோ்பால், சோபியான் மற்றும் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூா் மாவட்டத்தில் என்ஐஏ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது வழக்கு தொடா்பான ஆவணங்கள், டிஜிட்டல் கருவிகள், சிம் காா்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கு குறித்து தொடா் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments