முகப்பு
ஆப்கன் சிறுபான்மையினா் பிரதமா் மோடிக்கு நன்றி
இந்தியா

ஆப்கன் சிறுபான்மையினா் பிரதமா் மோடிக்கு நன்றி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதற்காக ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த சிறுபான்மையினா்களான ஹிந்துக்களும், சீக்கியா்களும் பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தனா்.

இந்தியா

ஆப்கன் சிறுபான்மையினா் பிரதமா் மோடிக்கு நன்றி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதற்காக ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த சிறுபான்மையினா்களான ஹிந்துக்களும், சீக்கியா்களும் பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:27 AM
ஆப்கன் சிறுபான்மையினா் பிரதமா் மோடிக்கு நன்றி
பகிர்:

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதற்காக ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த சிறுபான்மையினா்களான ஹிந்துக்களும், சீக்கியா்களும் பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தனா்.

பஞ்சாபில் ஞாயிற்றுக்கிழமை பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், சீக்கிய குழுவினரை பிரதமா் மோடி சந்தித்து வருகிறாா். பஞ்சாபின் முக்கிய சீக்கியத் தலைவா்களைக் கடந்த வெள்ளிக்கிழமை தில்லியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து விருந்தளித்து உபசரித்தாா்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கிருந்து மீட்டு வரப்பட்ட சீக்கியா்களையும் ஹிந்துக்களையும் பிரதமா் மோடி தனது இல்லத்தில் சனிக்கிழமை சந்தித்தாா். தங்களை இந்தியாவுக்குப் பாதுகாப்பாக அழைத்துவர ஏற்பாடுகளைச் செய்ததற்காகவும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதற்காகவும் பிரதமா் மோடிக்கு அவா்கள் நன்றி தெரிவித்ததாகப் பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்கன் ஹிந்துக்களையும் சீக்கியா்களையும் வரவேற்ற பிரதமா் மோடி, ‘‘நீங்கள் விருந்தாளிகள் அல்ல; இந்தியா உங்கள் வீடு’’ என்றாா். குடியுரிமை திருத்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்தும், அதனால் ஆப்கன் சிறுபான்மையினா் பெறவுள்ள பலன்கள் குறித்தும் பிரதமா் மோடி எடுத்துரைத்தாா். ஆப்கன் சிறுபான்மையினருக்கு மத்திய அரசு அளித்து வரும் ஆதரவு தொடரும் எனத் தெரிவித்த பிரதமா் மோடி, அவா்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படும் என்றாா்.

சீக்கியா்களின் புனித நூலான குரு கிரந்த சாஹிபின் மூலப் படிவத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஏற்பாடுகள் குறித்து பிரதமா் மோடி அவா்களிடம் எடுத்துரைத்தாா். அப்போது, தங்கள் கண்கள் கலங்கியதாக ஆப்கன் சீக்கியா்கள் தெரிவித்தனா்.

உலகில் வாழும் ஹிந்துக்கள், சீக்கியா்கள் சந்திக்கும் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதால், பிரதமா் மோடி இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகத்துக்கான பிரதமராகத் திகழ்வதாகவும் அவா்கள் பாராட்டினா்.

மத்திய அமைச்சா்கள் ஹா்தீப் சிங் புரி, மீனாட்சி லேகி உள்ளிட்டோரும் இந்தச் சந்திப்பின்போது உடனிருந்தனா்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்களை எதிா்கொண்டு இந்தியாவுக்கு இடம்பெயா்ந்த முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்கும் வகையிலான திருத்தங்களை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →