இந்தியா

தோண்டி எடுக்கப்பட்ட பெண்ணின் உடல்...வரதட்சிணை புகாரால் வழக்கில் திருப்பம் 

DIN

உத்தரப் பிரதேசம் முசாபர்நகரில் புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. வரதட்சிணை புகார் எழுந்ததையடுத்து உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அலுவலர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசிய காவல்துறை அலுவலர், "மகியாலி கிராமத்தில் வசித்துவரும் அப்பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த குலிஸ்தா பேகம் என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், வரதட்சிணையாக 2 லட்சம் ரூபாய் மற்றும் மோட்டார் சைக்கிள் கேட்டுள்ளனர். இதையடுத்து, அவரது மாமியாரால் அடித்துக் கொல்லப்பட்டார். பிப்ரவரி 14ஆம் தேதி அவரது உடல் புதைக்கப்பட்டது. உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.

இதையடுத்து, அவரது கணவர் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். 

கடந்த 2015ஆம் ஆண்டு, குலிஸ்டா பேகம் மிர் ஹாசனை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT