முகப்பு
இந்தியா

குஜராத் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடக்கம்

குஜராத்தில் உள்ள பள்ளிகளில் இன்று முதல் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளது. 

Updated On : 21 பிப்ரவரி, 2022 at 3:31 PM
பகிர்:

குஜராத்தில் உள்ள பள்ளிகளில் இன்று முதல் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளது. 

கரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் தாற்காலிகமாக மூடப்பட்ட நிலையில், தற்போது கரோனா சற்று தணிய ஆரம்பித்த நிலையில், இன்று முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு குஜராத் அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

பள்ளிக்கு வருகை தந்த மாணவர்கள் அனைவரும் தங்கள் நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் கணினி மற்றும் மொபைல் போன்களில் வகுப்புகளை விட ஆப்லைன் (நேரடி) வகுப்புகள் சிறந்தது என்று கூறினர். 

Advertisement

மேலும், மாணவர்கள் அனைவருக்கும் வெப்பநிலை சரிபார்த்த பின்னரே பள்ளிக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள் முகக்கவசம் அணிந்தபடியே காணப்பட்டனர் என்று பள்ளி அதிகாரி தெரிவித்தார். 

கரோனா தொற்று நோயால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர்கள் மிகப்பெரிய இழப்புகள் எதிர்கொண்டதாக அகமதாபாத்தில் உள்ள ஒரு பள்ளி முதல்வர் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.