முகப்பு
இந்தியா

ஒடிசாவில் சாலை விபத்து: 4 பேர் பலி, 7 பேர் காயம்

ஒடிசாவின் கலஹன்டி மாவட்டத்தில் கார், டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர், 7 பேர் காயமடைந்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:28 AM
பகிர்:

ஒடிசாவின் கலஹன்டி மாவட்டத்தில் கார், டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர், 7 பேர் காயமடைந்தனர். 

கெசிங்க காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை 217இல் துர்லகமன் அருகே திங்கள்கிழமை இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

திருமண விழாவில் பங்கேற்ற 11 பேர், போலங்கிர் மாவட்டத்தில் உள்ள பிபால்பதாரில் இருந்து சிசெகேலாவில் உள்ள தங்கள் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, டிரக் மீது கார் மோதியது. 

இதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒரு குழந்தை உள்பட காயமடைந்தவர்கள் அருகிலுள்ள கேசிங்க அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காயமடைந்த குழந்தை புர்லாவில் உள்ள விம்சாம்(VIMSAR) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
 

முழு கட்டுரையைப் படிக்க →