இந்தியா

ஒடிசாவில் சாலை விபத்து: 4 பேர் பலி, 7 பேர் காயம்

DIN

ஒடிசாவின் கலஹன்டி மாவட்டத்தில் கார், டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர், 7 பேர் காயமடைந்தனர். 

கெசிங்க காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை 217இல் துர்லகமன் அருகே திங்கள்கிழமை இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

திருமண விழாவில் பங்கேற்ற 11 பேர், போலங்கிர் மாவட்டத்தில் உள்ள பிபால்பதாரில் இருந்து சிசெகேலாவில் உள்ள தங்கள் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, டிரக் மீது கார் மோதியது. 

இதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒரு குழந்தை உள்பட காயமடைந்தவர்கள் அருகிலுள்ள கேசிங்க அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காயமடைந்த குழந்தை புர்லாவில் உள்ள விம்சாம்(VIMSAR) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT