உத்தரப் பிரதேசத்தில் புதன்கிழமை நான்காம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிற்பகல் 3 மணி வரை 49.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது தோராயமானது. ஏனெனில் சில வாக்குச் சாவடிகளில் தரவுகள் வழங்குவதற்கு நேரம் எடுக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பண்டா 50.07 சதவீதம், ஃபதேபூர் 52.51 சதவீதம், ஹர்டோய் 46.44 சதவீதம், கெரி 52.98 சதவீதம், லக்னோ 47.83 சதவீதம், பிலிபிட் 54.81 சதவீதம், ரேபரேலி 50.83 சதவீதம், சீதாபூர் 4.31 சதவீதம் 50.26 சதவீதம் பதிவானது.
உத்தரப் பிரதேச சட்டசபைக்கு நான்காம் கட்ட வாக்குப்பதிவில் உள்ள வாக்காளர்கள் 624 வேட்பாளர்களில் இருந்து ஒன்பது மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளிலிருந்து எம்எல்ஏக்களை தேர்வு செய்ய வாக்களித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.