இந்தியா

உ.பி. பேரவைத் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 53.98% வாக்குப்பதிவு

உத்தரப் பிரதேசத்தில் பேரவைத் தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 53.98 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

DIN

உத்தரப் பிரதேசத்தில் பேரவைத் தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 53.98 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

உத்தர பிரதேசத்தில் 403 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப்.10 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கெனவே 4 கட்ட தோ்தல் நிறைவடைந்துள்ள நிலையில், 5-ஆம் கட்டமாக 61 தொகுதிகளுக்கு இன்று வாக்குபதிவு நடைபெற்றது.

மக்கள் ஆர்வமுடன் தங்களது ஜனநாயக் கடமையை ஆற்றினர். 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 53.98 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காங்கிரஸின் கோட்டையாக ஒருகாலத்தில் கருதப்பட்ட அமேதி, ரேபரேலி, ராமா் கோயில் கட்டப்படும் அயோத்தி ஆகிய தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT