முகப்பு
இந்தியா

இந்திய தூதர்களின் பங்களிப்பு சிறப்பானது: உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள்

போர் நடைபெற்று வரும் உக்ரைனிலிருந்து திரும்பும் இந்தியர்களில் பெரும்பாலானோர் மாணவர்களாக இருக்கும் நிலையில், இந்திய தூதர்களின் நடவடிக்கையால், தங்களது பயணம் தடையற்றதாக இருந்ததாகக் கூறுகிறார்கள்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:32 AM
உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள்
பகிர்:


பெங்களூரு: போர் நடைபெற்று வரும் உக்ரைனிலிருந்து திரும்பும் இந்தியர்களில் பெரும்பாலானோர் மாணவர்களாக இருக்கும் நிலையில், இந்திய தூதர்களின் நடவடிக்கையால், தங்களது பயணம் தடையற்றதாக இருந்ததாகக் கூறுகிறார்கள்.

உக்ரைனிலிருந்து ஹங்கேரி, ஸ்லோவாகியா வழியாக இந்தியாவை வந்தடைந்த உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த முதலாமாண்டு மாணவர்கள்  மொஹம்மது ஷோயப், பிரதிக் நாகராஜ் ஆகியோர், ரஷியாவின் தாக்குதலுக்கு உள்ளாகாத மேற்குப் பகுதியிலிருந்து வந்துள்ளனர்.

உக்ரைனில் போர் தொடங்கியதுமே, இந்திய தூதர்கள் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகள் மூலம், அங்கிருந்த இந்திய மாணவர்கள் ஹங்கேரி மற்றும் ஸ்லோவாகியா நாடுகளுக்கு பத்திரமாக வரவழைக்கப்பட்டனர்.

ஹங்கேரி எல்லையில் எங்களது கடவுச்சீட்டுகள் மட்டும் பரிசோதிக்கப்பட்டு அனுமதியளிக்கப்பட்டது. அங்கிருந்து விமானம் மூலம் தாயகம் திரும்பினோம் என்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.