கோப்புப்படம் 
இந்தியா

இந்திய மாணவர்களை விரைந்து மீட்க அமைச்சர் ஜெய்சங்கரிடம் சரத் பவார் கோரிக்கை

உக்ரைன் மற்றும் அண்டை நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். 

DIN

உக்ரைன் மற்றும் அண்டை நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை அடுத்து அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உக்ரைனிலிருந்து 5 ஏா் இந்தியா விமானங்கள் மூலமாக இதுவரை 1,156 இந்தியா்கள் தாயகம் திரும்பியுள்ளனர். 

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் போலாந்து, ரோமானியா,  ஹங்கேரி, ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளில் 24*7 கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் உக்ரைனின் கார்கிவ் பகுதியில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசி வாயிலாக இன்று பேசியுள்ளார். 

இந்தியர்களை ரஷியாவின் பெல்கோரோட்(Belgorod ) வழியாகவும், ரோமானியா- போலந்து எல்லையில் சிக்கியுள்ள மாணவர்களை  மீட்பது குறித்தும் அவர் பேசியுள்ளார். மாணவர்களை விரைந்து அழைத்து வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT