இந்தியா

கர்நாடகத்திலிருந்து மேல்மருவத்தூர் வந்துசென்ற 35 பேருக்கு கரோனா

DIN

கர்நாடகத்தில் இருந்து மேல்மருவத்தூர் வந்துசென்ற 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இரு தினங்களுக்கு முன்பு, கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் இருந்து 3 பேருந்துகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்துள்ளனர். 

இதில் இரண்டு பேருந்துகள் இன்று கர்நாடகம் திரும்பிய நிலையில் அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 35 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

மேலும், ஒரு பேருந்து நாளை மண்டியா மாவட்டத்தை வந்தடையும் என்றும் அவர்களுக்கும் முழுமையாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT