இந்தியா

அரவிந்த் கேஜரிவாலுக்கு கரோனா

IANS


புது தில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அரவிந்த் கேஜரிவால், தனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், லேசான அறிகுறிகளே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சுட்டுரையில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளே உள்ளன. நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த ஒரு சில நாள்களில் என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதும், கரோனா பரிசோதனை மேற்கொள்வதும் நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தில்லியில் கரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

திங்களன்று புது தில்லியில் 4,099 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2021ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி பதிவான 4,482 தொற்று பாதிப்புக்குப் பிறகு பதிவாகும் அதிகபட்ச பாதிப்பாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT