காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச்சூடு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
காஷ்மீரில் கடந்த 3 நாட்களில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் கடந்த 3 நாட்களில் நான்கு முறை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப் படையினரால் 3 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புல்வாமா மாவட்டம் சந்த்கம் கிராமத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக வந்த தகவலின்பேரில், சிஆர்பிஎஃப் மற்றும் ராணுவம் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்குப் பதில் தாக்குதல் நடத்தியதில் 3 ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Advertisement
Advertisement
தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீரில் மூன்று நாட்களில் நடந்த 4-வது துப்பாக்கிச்சூடு இதுவாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.