‘பிரதமரின் பொதுக் கூட்டங்களை நிறுத்த வேண்டும்’: தேர்தல் ஆணையருக்கு காங். கடிதம்
பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் பெரிய கூட்டங்களை நிறுத்த உத்தரவிடக் கோரி காங்கிரஸ் சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் பெரிய கூட்டங்களை நிறுத்த உத்தரவிடக் கோரி காங்கிரஸ் சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளனர்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மார்ச் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பிரசாரத்தை அனைத்து கட்சியினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு உ.பி. காங்கிரஸ் அனுப்பிய கடிதத்தில்,
“கரோனா மூன்றாம் அலையை தடுக்க பெரிய பேரணிகளுக்கு தடை விதிக்க வேண்டும். பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆகியோரின் பெரிய பொதுக் கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். அரசு இயந்திரம் மற்றும் பணத்தில் ஏற்பாடு செய்யும் திட்டங்களின் துவக்க நிகழ்ச்சி கூட்டங்களில் அரசியல் கருத்துகளை பேசுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.”
முன்னதாக உ.பி. முழுவதும் நடைபெறவிருந்த காங்கிரஸின் மாரத்தான் ஓட்டப்பந்தயங்களை ஒத்திவைப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.