கேரளத்தில் மேலும் 50 பேருக்கு ஒமைக்ரான்
கேரளத்தில் மேலும் 50 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் மேலும் 50 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் குறித்து கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது:
"கேரளத்தில் மேலும் 50 பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 45 பேர் குறைந்த அபாயப் பட்டியலிலுள்ள நாடுகளிலிருந்து வந்தவர்கள். 5 பேர் அதிக அபாயப் பட்டியலிலுள்ள நாடுகளிலிருந்து வந்தவர்கள். தொடர்பிலிருந்தவர்கள் மூலம் எவருக்கும் ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.
இதையும் படிக்க | இத்தாலியிலிருந்து பஞ்சாப் வந்த 125 பயணிகளுக்கு கரோனா
கேரளத்தில் ஒமைக்ரான் தொற்றால் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது."