தில்லியில் ஒரே நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தலைநகர் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட கரோனா தொற்று பாதிப்பு நிலவரப்படி புதிதாக 15,097 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1489463 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | நேரலையில் ஒளிபரப்பான சட்டப்பேரவை கூட்டத்தொடர்: விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் தொற்றால் பலியாகியுள்ளனர். இதுவரை தில்லியில் கரோனாவால் 25127 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 31,498 பேர் தொற்று பாதிப்பிற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் 15.34 சதவிகிதமாக உள்ளது.