ஜார்கண்ட்: சாலை விபத்தில் 17 பேர் பலி, 26 பேர் காயம்
ஜார்கண்ட்டில் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டத்தில் 17 பேர் பலியாகியுள்ளனர்.
ஜார்கண்ட்டில் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டத்தில் 17 பேர் பலியாகியுள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலம் பாகுர் மாவட்டத்தின் கோவிந்த்பூர் - சஹிப்பாஞ் மாநில நெடுஞ்சாலையில் நேற்று(ஜன.5) காலை 40 பேருடன் வந்த பயணிகள் பேருந்தும் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிவந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே 17 பேர் பலியானதோடு 26 பேர் படுகாயம் அடைந்தனர்.
பலி எண்ணிக்கை உயர வாய்ப்பிருப்பதால் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், மாவட்ட நிர்வாகமும் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளது.