மத்திய அமைச்சர் பாரதி பவாருக்கு கரோனா பாதிப்பு
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பாரதி பவாருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பாரதி பவாருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரை பதிவில் கூறியது,
கரோனா சோதனை மேற்கொண்டதில் தனக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது, இதையடுத்து வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன்
கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொண்டு, கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள திண்டோரி மக்களவை உறுப்பினராக உள்ளவர் பவார். இந்த வாரத் தொடக்கத்தில், தெற்கு மும்பையைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் அரவிந்த் சாவந்த், மகாராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்எல்ஏ வித்யா தாக்கூர் ஆகியோருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம், மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், மாநிலத்தில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்எல்ஏக்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.