உச்சநீதிமன்றம் 
இந்தியா

மருத்துவ மேற்படிப்பில் ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு உறுதி: கலந்தாய்வுக்கு அனுமதி

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) 27 சதவீதம் இடஒதுக்கீட்டை உறுதி செய்து கலந்தாய்வுக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) 27 சதவீதம் இடஒதுக்கீட்டை உறுதி செய்து கலந்தாய்வுக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நீதிபதிகள்  டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு கூறியதாவது:

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புகளில் ஓபிசிக்கு ஒதுக்கப்பட்ட 27 சதவீதம் செல்லும், இடபிள்யுஎஸ் வகுப்பினருக்கு இந்தாண்டு மட்டும் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கலாம் என இடைக்கால உத்தரவிட்டனர்.

மேலும், இடபிள்யுஎஸ் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு குறித்து மார்ச் மாதத்தில் விரிவான தீர்ப்பு வழங்கப்படும். மருத்துவ முதுநிலைப் படிப்பிற்கான கலந்தாய்வை நடத்திக் கொள்ள மத்திய அரசுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்றனர்.

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கு 27 சதவீதம், இடபிள்யுஎஸ் வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.

இந்த அறிவிப்புக்கு எதிராக முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தோ்வை எழுதிய மாணவா்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இடபிள்யுஎஸ் வகுப்பினரை அடையாளம் காண ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டது குறித்து மத்திய அரசுக்கு பல கேள்விகளை எழுப்பியது. இந்த வழக்கு காரணமாக முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இடபிள்யுஎஸ் வகுப்பினரை அடையாளம் காண்பதற்கான வருமான உச்சவரம்பை மறுபரிசீலனை செய்வதாக தெரிவித்திருந்த மத்திய அரசு, அந்த வகுப்பினரை அடையாளம் காண அவா்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாகவே தொடரும் என்று அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்துக்கு உதவ மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் இதுதொடா்பாக நீண்ட விவாதங்களை மேற்கொள்ள முடியாது. ஏனெனில் நாட்டுக்குப் புதிய மருத்துவா்கள் தேவைப்படுகின்றனா் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது: எவ்வளவு?

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

கடும் சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!

அழிஞ்சாட்டம்: மோகன்லால் - திலீப் படத்தின் முதல் பாடல்!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ தொடக்க விழாவில் பங்கேற்கும் மோடி!

SCROLL FOR NEXT