ஜம்மு - காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ஜம்மு - காஷ்மீர் காவல்துறை வெளியிட்ட செய்தியில்,
புட்கம் மாவட்டம் சோல்வா சதூரா என்ற பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் வியாழக்கிழமை இரவு முதல் மேற்கொண்டனர்.
Advertisement
அப்போது நடைபெற்ற சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகின்றன.
மேலும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.