மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சக அலுவலகத்தில் 20 பணியாளர்களுக்கு கரோனா
மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சக அலுவலகத்தில் 20 பணியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சக அலுவலகத்தில் 20 பணியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை அம்மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையை பொறுத்தவரை நேற்று 67,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில் 20,181 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் 1,170 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,53,809ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு நேற்று மேலும் 4 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிகை 16,388ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கரோனவிலிருந்து 2,837 பேர் குணமடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,55,563ஆக உயந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 35,594 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.