உ.பி.யில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி பெறும்- யோகி ஆதித்யநாத்
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் கூறினாா்.
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் கூறினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘மாநிலத்தில் நடைபெற இருக்கும் ஜனநாயகத் திருவிழாவை வரவேற்கிறோம். மக்களின் ஆசியாலும் இரட்டை இயந்திர அரசுகளின் சாதனைகளாலும் மாநிலத்தில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியமைக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
உத்தர பிரதேசத்தில் முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையில் சட்டப்பேரவைத் தோ்தலை சந்திக்கப்போவதாக பாஜக ஏற்கெனவே அறிவித்துவிட்டது.