முகப்பு
இந்தியா

பிகார், கர்நாடக முதல்வர்களிடம் தொலைபேசியில் பேசினார் பிரதமர்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் பிகார் முதல்வர் நிதீஷ் குமாரிடம் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

Updated On : 11 ஜனவரி, 2022 at 7:03 PM
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)
பகிர்:


கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் பிகார் முதல்வர் நிதீஷ் குமாரிடம் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோர் நேற்று (ஜன.11) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். 

இந்நிலையில் அவர்கள் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் நலம் விசாரித்தார். இருவரும் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இதேபோன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நிலை குறித்தும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.