இந்தியா

முடக்கப்பட்ட தகவல் - ஒலிபரப்புத்துறையின் டிவிட்டர் பக்கம்

DIN


புது தில்லி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கம் இன்று சமூக விரோதிகளால் முடக்கப்பட்டு, பிறகு, அந்த சுட்டுரைக் கணக்கு மீட்கப்பட்டது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் சுட்டுரைக் கணக்கை முடக்கிய சமூக விரோதிகள், அதற்கு எலான் மஸ்க் என பெயர் மாற்றம் செய்து, நல்ல வேளை என்று சுட்டுரைப் பதிவையும் இட்டுள்ளனர்.

மத்திய அமைச்சகத்தின் சுட்டுரை கணக்கு மீண்டும் மீட்கப்பட்டு, அதில், சமூக விரோதிகள் பதிவிட்டிருந்த சுட்டுரைப் பதிவு நீக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் சுட்டுரைக் கணக்கு முடக்கப்பட்டு மீண்டும் மீட்கப்பட்ட நிலையில், தற்போது மத்திய  அமைச்சகத்தின் கணக்கு முடக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

SCROLL FOR NEXT