இந்தியாவில் 3 லட்சத்தை கடந்தது ஒருநாள் பாதிப்பு: 491 பேர் பலி
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,17,532 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,17,532 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தரவுகள் அடங்கிய தகவலை மத்திய சுகாதாரத் துறை இன்று (ஜன.20) வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 3,17,532 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,82,18,773-ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
இதனால் கரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 16.41 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் சிகிச்சை பலனில்லாமல் 491 பேர் நேற்று பலியான நிலையில், தற்போது 19,24,051 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பில் 5.03 சதவிகிதம் மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,23,990 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.58 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுவரை நாடு முழுவதும் 159.67 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.