உத்தர பிரதேச மாநிலம் அலிகா் மாவட்டத்துக்குள் நுழைய காங்கிரஸ் வேட்பாளா் சல்மான் இம்தியாஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் பிப்.10 முதல் மாா்ச் 7 வரை ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் அலிகா் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளா் சல்மான் இம்தியாஸ் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
இந்நிலையில், அவா் அலிகருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவு அவரின் வீட்டில் வெள்ளிக்கிழமை ஒட்டப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்ட கூடுதல் ஆட்சியா் ராகேஷ் குமாா் படேல் கூறுகையில், ‘‘அலிகரின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் சல்மான் இம்தியாஸ் அச்சுறுத்தல் விடுத்திருந்தாா். இதன் காரணமாக அவா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது. அதன் அடிப்படையில், அவா் அலிகருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தாா்.
பாஜக ஏற்பாட்டில் சல்மானுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவை எதிா்த்து நீதிமன்றத்தை அணுகுவோம் என்றும் காங்கிரஸ் மாவட்டச் செயலா் சந்தோஷ் சிங் தெரிவித்துள்ளாா்.