முகப்பு
இந்தியா

உ.பி.யில் ஜன.30 வரை அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடல்

உ.பி.யில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜன.30 வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 22 ஜனவரி, 2022 at 6:58 PM
கோப்புப் படம்
பகிர்:

உ.பி.யில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜன.30 வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
உத்தரப் பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை தற்போது 95,866 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கரோனாவிலிருந்து 17,97,728 பேர் மீண்ட நிலையில் 23,022 பேர் பலியாகியுள்ளனர். 

இந்த நிலையில் உ.பி.யில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜன.30 வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக அம்மாநில கூடுதல் தலைமைச் செயலர் அவ்னிஷ் குமார் அவஸ்தி தெரிவித்துள்ளார். 
முன்னதாக கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஜனவரி 23ஆம் தேதி வரை மூடப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த உத்தரவு நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வாரம் நீட்டித்து அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.