இந்தியா

மகாராஷ்டிரம்: ரசாயனத் தொழிற்சாலையில் தீ விபத்து

DIN

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் உள்ள ரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரம்

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரின் இச்சல்கரஞ்சி தாலுகாவில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் திங்கள்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தகவலறிந்து 4 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள்  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அணைக்கப்பட்டது. தீ விபத்து காரணமாக தொழிற்சாலை உள்ள பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் தொழிலாளர்கள் யாரும் அங்கு இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் இந்த விபத்தினால் தொழிற்சாலை அருகே உள்ள ஒரு துணிக்கடையும் சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT