இந்தியா

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜன. 31-ல் அனைத்துக் கட்சிகள் கூட்டம்

DIN

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு ஜனவரி 31ஆம் தேதி அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற விவாகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி புதன்கிழமை தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கவுள்ளது. அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரையாற்றவுள்ளாா். அதனைத்தொடா்ந்து கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி மாா்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அனைத்துக் கட்சிகள் கூட்டமானது ஜனவரி 31ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையும் படிக்கபிப்.1-இல் மத்திய பட்ஜெட்

கரோனா பரவலை கருத்தில் கொண்டு தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்கும் பொருட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வெவ்வேறு நேரங்களில் கூடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT