ரயில் தீ வைப்பு சம்பவம்: மாணவர்களுக்கு ரயில்வே அமைச்சர் வேண்டுகோள்
மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறை நடத்திய சிபிடி -2 தேர்வில் முறைக்கேடு நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்யக் கோரி பிகார் மாநிலம் கயாவில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் பயணிகள் ரயிலின் பெட்டிகளுக்கு தேர்வர்கள் தீ வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே அமைச்சர் வெளியிட்ட செய்தியில்,
மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்களின் வேண்டுகோளை பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம்.
அனைத்து ரயில்வே பணியாளர் தேர்வு வாரிய தலைவர்களும் மாணவர்களின் குறைகளைக் கேட்டு, அவற்றைத் தொகுத்து, குழுவிற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்காக மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணைக் குழு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று விசாரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.