இந்தியா

கான்பூரில் பேருந்து மோதியதில் 5 பேர் பலி

ANI


கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் டட் மின் சந்திப்பில், பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் மீது மின்சார பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 5 பேர் பலியாகினர்.

மூன்று கார்கள், ஏராளமான பைக்களும், பேருந்து விபத்தில் சேதமடைந்தன. பேருந்தின் ஓட்டுநர் விபத்து நிகழ்ந்தவிடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். அவரைத் தேடும் பணி நடந்து வருவதாக காவல்துறை துணை ஆணையர் பிரமோத் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாகவும், விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT