கோப்புப்படம் 
இந்தியா

பாட்னா நீதிமன்றத்தில் வெடிபொருள் வெடிப்பு: காவலர் காயம்

பாட்னா சிவில் நீதிமன்றத்தில் வெடிபொருள் வெடித்ததில் காவலர் ஒருவர் காயமடைந்தார். 

DIN

பாட்னா சிவில் நீதிமன்றத்தில் வெடிபொருள் வெடித்ததில் காவலர் ஒருவர் காயமடைந்தார். 

பிகார் மாநிலம், பாட்னா பல்கலைக்கழகத்தில் அண்மையில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வெடிபொருள் வெடித்ததில் காவலர் ஒருவர் காயமடைந்தார். 

உடனடியாக அவர் அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இதுதொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சிவில் நீதிமன்றத்தில் வெடிபொருள் வெடித்த சம்பவம் பாட்னாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

விளையாட்டுத் துளிகள்...

பாகிஸ்தானிலிருந்து ஜப்பான் வந்த போலி கால்பந்து அணி!

‘பொருளாதாரத் தடைகளைத் தவிா்க்க ஈரான் எதுவும் செய்யவில்லை’ -ஜொ்மனி

SCROLL FOR NEXT