இந்தியா

எஸ்.ஐ. நியமனத்தில் முறைகேடு: கர்நாடக ஏடிஜிபி கைது

DIN

ஊழல் குற்றச்சாட்டில் கர்நாடக மாநிலத்தின் ஏடிஜிபி அம்ரித் பாலை சிஐடி காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர்.

கர்நாடகாவில் கடந்தாண்டு காவல் உதவி ஆய்வாளர் நியமனத்தில் மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், இந்த வழக்கை சிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில் ஏடிஜிபி அம்ரித் பாலுக்கு எதிராக ஆதாரம் சிக்கிய நிலையில் சிஐடி காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஞானேந்திரா கூறுகையில், “எஸ்.ஐ. நியமன முறைகேட்டில் ஏடிஜிபி அம்ரித் பாலுக்கு எதிராக ஆவணங்கள் சிக்கியுள்ளன. முறைகேட்டில் யார் ஈடுபட்டாலும் தப்ப முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT