ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு கோருவதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு அசாம் வந்துள்ளார்.
ஆளும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான கன பரிஷத்(ஏஜிபி) மற்றும் ஐக்கிய மக்கள் கட்சி லிபரல்(யுபிபிஎல்) ஆகியவற்றின் எம்.பி.க்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சந்திக்க உள்ளார் .
செவ்வாய் இரவு அசாம் வந்த முர்முவை, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்தா சோனோவால், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அவரது அமைச்சரவை அமைச்சர்கள், மாநில பாஜக தலைவர் பாபேஷ் கலித் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
அவர் இங்குள்ள நகர விடுதியில், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை சந்திப்பார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.