வெள்ளத்தில் காரோடு அடித்துச் செல்லப்பட்ட குடும்பம்: 9 பேர் பலி; சிறுமி மீட்பு 
இந்தியா

வெள்ளத்தில் காரோடு அடித்துச் செல்லப்பட்ட குடும்பம்: 9 பேர் பலி; சிறுமி மீட்பு

தேலா ஆற்றின் வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டதில், அதில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது  பேர் பலியாகினர். ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

ANI

நைனிடால்:  உத்தரகண்ட் மாநிலம் ராம்நகர் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை, தேலா ஆற்றின் வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டதில், அதில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது  பேர் பலியாகினர். ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த கோர விபத்து இன்று அதிகாலை 5 மணியளவில் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரிலிருந்து இதுவரை 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கடுமையான வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், வெள்ளத்துக்குள் சிக்கியிருக்கும் காரிலிருந்து மற்ற உடல்களை மீட்க முடியாமல் மீட்புக் குழுவினர் தத்தளித்து வருகிறார்கள்.

இது குறித்து காவல்துறை உதவி ஆய்வாளர் கூறுகையில், தேலா ஆற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் 9 பேர் பலியாகினர். ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார். காரிலிருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டன. 5 பேரின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடையநல்லூா், வீரகேரளம்புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளில் வலிமையான குடும்ப இயக்கம் திட்ட முகாம் தொடக்கம்

தென்காசியில் மகளிா் குழுவினருக்கு ரூ. 55.44 கோடி நலத்திட்ட உதவிகள்

பெரியாா் எங்கும், என்றும் நிலைத்திருப்பாா்: முதல்வா்

வரி ஏய்ப்பு புகாா்: நகைக் கடையில் வருமான வரித் துறை சோதனை

SCROLL FOR NEXT