இந்தியா

அமர்நாத் மேகவெடிப்பு: காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார் துணைநிலை ஆளுநா்

ஜம்மு-காஷ்மீரின் அமர்நாத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் காயமடைந்தவர்களை நேரில் சென்று உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா. 

ANI

ஜம்மு-காஷ்மீரின் அமர்நாத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் காயமடைந்தவர்களை நேரில் சென்று உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா. 

அமர்நாத்தில் நேற்று திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு பெருவெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து யாத்திரையில் ஈடுபட்டிருந்த பலர் சிக்கினர். இந்த சம்பவத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திலிருந்து 15,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 28 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை காஷ்மீர் துணைநிலை ஆளுநா் இன்று நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், பலத்த காயமடைந்த சிலர் ஸ்ரீநகருக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணி  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்திய ராணுவம் மற்றும் மாநிலப் படைகள் உள்ளிட்ட அனைத்துக் குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. விமானப்படை மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்பட மொத்தம் 8 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

SCROLL FOR NEXT