அமர்நாத் மேகவெடிப்பு: காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார் துணைநிலை ஆளுநா்
ஜம்மு-காஷ்மீரின் அமர்நாத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் காயமடைந்தவர்களை நேரில் சென்று உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா.
ஜம்மு-காஷ்மீரின் அமர்நாத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் காயமடைந்தவர்களை நேரில் சென்று உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா.
அமர்நாத்தில் நேற்று திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு பெருவெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து யாத்திரையில் ஈடுபட்டிருந்த பலர் சிக்கினர். இந்த சம்பவத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திலிருந்து 15,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்கலாம்: அமர்நாத் மேக வெடிப்பு: பலி 15 ஆக உயர்வு! இன்னும் 30-40 பேரைக் காணவில்லை?
Advertisement
இதுவரை 28 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை காஷ்மீர் துணைநிலை ஆளுநா் இன்று நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், பலத்த காயமடைந்த சிலர் ஸ்ரீநகருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் மற்றும் மாநிலப் படைகள் உள்ளிட்ட அனைத்துக் குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. விமானப்படை மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்பட மொத்தம் 8 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.