இந்தியா

மழைக்கால கூட்டத்தொடர்: ஜூலை 17-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

DIN

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை முன்னிட்டு ஜூலை 17ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் கடைசிக் கூட்டம் இதுவாகும்.

இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ஜூலை 17ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

கூட்டத் தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவா் தோ்தலும், ஆகஸ்ட் 6-ஆம் தேதி குடியரசு துணைத் தலைவா் தேர்தலும் நடைபெறவுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே பதவி ஏற்பார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT