இந்தியா

நீதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் பொறுப்பேற்பு

DIN

நீதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக, குடிநீா்- துப்புரவுத் துறை முன்னாள் செயலா் பரமேஸ்வரன் ஐயா் பொறுப்பேற்றுள்ளார்.

நீதி ஆயோகின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த், கடந்த மாதம் 30-ஆம் தேதியுடன் ஓய்வுபெற்றார். இதையடுத்து அந்தப் பதவியில், உத்தர பிரதேசத்தின் 1981 பிரிவு ஐஏஎஸ் மூத்த அதிகாரி பரமேஸ்வரன் ஐயா் கடந்த ஜூன் 24 ஆம் தேதி நியமிக்கப்பட்டாா்.

இந்நிலையில், நேற்று(திங்கள்கிழமை) நீதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமைச் செயல் அதிகாரியா பரமேஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவா் 2 ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை இப்பதவியை வகிப்பாா்.

கடந்த 2009-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் இருந்து பரமேஸ்வரன் ஐயா் விருப்ப ஓய்வுபெற்றாா். பின்னா் ஊரக குடிநீா் வழங்கல் துறையின் நிபுணராக ஐ.நா.வில் இவா் பணியாற்றினாா். 2016 முதல் 2020 வரை பிரதமரின் கனவுத் திட்டங்களில் ஒன்றான தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரமாகச் செயல்பட்டவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் கல்லூரியில் கோடை கால பயிற்சி

பெண் தற்கொலை

மழை எச்சரிக்கை: மதுரை அரசுப் பொருள்காட்சி ஒத்திவைப்பு

ராஜீவ் காந்தி நினைவு தின பேரணி

காமராஜா் பல்கலை. பேராசிரியா் மீது பாலியல் புகாா்

SCROLL FOR NEXT