இந்தியா

விடுமுறையில் செல்லும் விமானத் தொழில்நுட்ப ஊழியர்கள்: பாதிக்கப்படுமா சேவை?

DIN

சம்பளப் பிரச்னை காரணமாக விமான நிறுவனங்களின் தொழில்நுட்ப ஊழியர்கள் விடுமுறையில் செல்வதால் விமான சேவையில் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

விமான நிறுவனங்களின் பராமரிப்பு தொழில்நுட்ப ஊழியர்கள் கடந்த சில நாள்களாகவே சம்பள உயர்வு மற்றும் கரோனா காலத்தில் பிடித்தம் செய்த ஊதியத்தை வழங்கக் கோரிக்கை வைத்து வந்தனர்.

இவர்களின் கோரிக்கை கண்டுகொள்ளப்படாததால், கடந்த 5 நாள்களாக உடல்நிலை சரியில்லை எனக் கூறி பெரும்பாலான தொழில்நுட்ப வல்லுநர்கள் விடுமுறை எடுத்து வருகின்றனர். முதலில், இண்டிகோ விமான நிறுவனத்தில் பிரச்னை ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பிற நிறுவனங்களிலும் இந்தச் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விமானப் போக்குவரத்து இயக்குரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

“விமானப் போக்குவரத்து இயக்ககம் தொடர்ந்து இந்த பிரச்னையை கண்காணித்து வருகின்றது. தற்போது வரை விமானப் போக்குவரத்து இயல்பு நிலையில் உள்ளது. விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என நம்புகிறோம்.

இந்த பிரச்னை குறித்து விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT