'மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைந்து மக்கள் பணியில் ஈடுபட வேண்டும்' - பசவராஜ் பொம்மை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து நலம் பெற்று மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து நலம் பெற்று மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் உடல்நலம் தேறி வருவதாகவும் எனினும் சில நாள்களுக்கு ஓய்வு தேவை என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் நலம் விசாரித்த நிலையில், பல்வேறு தலைவர்களும் அவர் குணமடைய வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில், 'கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து மீள வாழ்த்துகிறேன். அவர் விரைந்து நலம் பெற்று, மக்கள் நலப்பணியில் ஈடுபட வேண்டும்' என்று கூறியுள்ளார்.