இந்தியா

சாவன் மாதம்: வடமாநிலங்களில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

இந்துக்களின் புனித மாதம் என்று அழைக்கப்படும் சாவன் மாதத்தின் முதல் திங்கள்கிழமையான இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 

DIN

இந்துக்களின் புனித மாதம் என்று அழைக்கப்படும் சாவன் மாதத்தின் முதல் திங்கள்கிழமையான இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 

சாவன் என்றழைக்கப்படும் ஆடி மாதம் வடமாநிலங்களில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

கங்கையிலிருந்து புனித நீரெடுத்து, நடந்தே வந்து தங்களது ஊரில் உள்ள சிவன் கோயிலில் உள்ள சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். 

கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் பக்தர்கள் ஒன்று கூடுவதற்கும் வழிப்பாட்டிற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் கோயிலுக்குச் சென்று ஆர்வத்துடன் சிவபெருமானை வழிபாடு செய்தனர். 

அதன்படி, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மஹாகாலேஷ்வர் கோயில், மும்பையில் உள்ள பாபுல்நாத் கோயில், தில்லியில் உள்ள கௌரி சங்கர் கோயில், உ.பி.யின் காஜியாபாத்தில் உள்ள துதேஷ்வர் நாத் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன.

வழிபாடுகளில் பங்கேற்க இன்று அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் நின்று சிவபெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தின் முதல் நதிநீா் இணைப்புத் திட்டம் தொடங்கியது: 23,000 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும்

பாபநாசம் கோயிலில் ரூ. 6.60 கோடியில் பரிகார மையம்: முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்

தோரணமலை முருகன் கோயிலில் ரூ. 1.88 கோடியில் கிரிவலப் பாதை: முதல்வா் ஸ்டாலின் தொடக்கிவைப்பு

சிவசைலம் அவ்வை ஆசிரமத்தில் இருபெரும் விழா

மாட வீதியில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை அமைச்சா் ஆய்வு

SCROLL FOR NEXT