ஜம்மு-காஷ்மீரின் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சில மணி நேரம் மூடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்பட்டது.
இன்று காலை பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் கற்கள் உருண்டு விழுந்த காரணத்தால் ஸ்ரீநகர் நெடுஞ்சாலை சில மணி நேரம் மூடப்பட்ட நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து ஜம்மு-ஸ்ரீநகர் (என்.எச்-44) வழியாக வாகனங்கள் மீண்டும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நெடுஞ்சாலை காஷ்மீர் பள்ளத்தாக்கின் உயிர்நாடியாகும். காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய சாலை இணைப்பு ஆகும்.